காலையில் தூங்கி எழுந்ததும் வயிற்றில் உள்ள கொழுப்பு செல்களைக் குறைக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எரிக்கவும் முயற்சி செய்ய வேண்டும். வயிற்றில் காலியாக இருக்கிற சமயங்களில் மெட்டபாலிசம் மிக வேகமாக நடக்கும். அதனால் தான் உடலை சுத்தப்படுத்த நாம் எடுத்துக் கொள்ளும் உணவாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் அதை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்கிறோம்.
சில பானங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் டாக்சின்களையும் அவை உடலிலிருந்து வெளியேற்றிவிடும்.
பானம் ஒன்று (மிளகுடன்)
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். குறிப்பாக, இதைக் குடித்து ஒரு மணி நேரம் கழித்து தான் வேறு எந்த உணவையும் உண்ணுதல் வேண்டும். இந்த பானத்தைக் குடித்து ஒரு மணி நேரம் வரை வேறு எதுவும் சாப்பிடக் கூடாது. குறிப்பாக காபி, டீ கையிலேயே தொடக் கூடாது. மிளகில் உள்ள கேப்சைசின் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டி, கொழுப்பு செல்களைக் கரைக்கும்.