இது வடிவேலு ஜோக் தானே, விடுகதை தானே என்று கடந்து போய் விட முடியாத ஒன்று தான் இந்த விடுகதை. இந்த விடுகதையைக் கேட்டு சிரிக்காதவர்களே யாரும் இருக்க முடியாது. அதற்கு மகாபலி சக்கரவர்த்தி பற்றிய பெரிய புராணக் கதையும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயமும் நிறைந்திருக்கிறது. சரி. வாங்க அந்த தட்டான் விடுகதைக்கான விடையைப் பார்ப்போம்.
தட்டான் யார்?
இந்த தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... என்ற விடுகதையைக் கேட்டு வாய்விட்டு விழுந்து விழுந்து சிரிக்காத நபர்களே இருந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று வரையிலும் அதற்கான பதில் என்பது என்ன என்ற சிக்கல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஏதோ காமெடியான பதிலாகத் தான் இருக்கும் நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது ஆன்மீகம் குறித்த, புராண இதிகாச செய்தியைப் பற்றிக் கூறுகின்ற பதில் என்பது நமக்குத் தெரியவில்லை.
இனிமேலாவது இந்த விடுகதையை சாதாரண உளறலாகவோ பிதற்றலாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். அது தெய்வீகம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட.